என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தமிழகத்தில் 8 ஆயிரத்து 286 ஏரிகள் நிரம்பின
Byமாலை மலர்1 Dec 2021 11:38 PM GMT (Updated: 1 Dec 2021 11:38 PM GMT)
சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில், 363 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தில் உள்ள 14 ஆயிரத்து 138 ஏரிகளில், 8 ஆயிரத்து 286 ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. 2 ஆயிரத்து 788 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 டி.எம்.சி.யில் 210.445 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது 93.82 சதவீதமாகும்.
சென்னை மாநகராட்சியில் மழை நீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில், 363 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 198 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது. இதுவரை 16 ஆயிரத்து 818 மருத்துவ முகாம்கள் மூலம் 5 லட்சத்து 30 ஆயிரத்து 574 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மழையால் ராமநாதபுரத்தில் ஒருவர் சுவர் இடிந்து விழுந்ததால் இறந்துள்ளார். அதேபோல், 436 கால்நடைகளும், 6 ஆயிரத்து 817 கோழிகளும் இறந்துள்ளன. 2 ஆயிரத்து 760 குடிசைகளும், 436 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
மேற்கண்ட தகவலை சென்னை மாநில அவசர கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X