search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    ஜோலார்பேட்டை அருகே ரெயில் மோதி மெக்கானிக் பலி

    ஜோலார்பேட்டை அருகே சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற ரெயிலில் அடிப்பட்டு மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் மாதேஸ்வரன் (வயது 45). இவர் சாலை நகர் பகுதியில் இருசக்கர வாகனம் மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று கடைக்கு செல்வதற்காக ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தாமலேரிமுத்தூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையிலிருந்து பெங்களூருக்கு சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×