என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பட்டுக்கோட்டை அருகே திருட்டுதனமாக மதுபாட்டில் விற்றவர் கைது
Byமாலை மலர்1 Dec 2021 10:41 AM GMT (Updated: 1 Dec 2021 10:41 AM GMT)
அரசு மதுபான கடைகள் 12 மணிக்கு திறக்கப்படும் என்பதால் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிலர் திருட்டுதனமாக அதிகாலை முதல் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை ஊராட்சி தங்கம் மண்டபம் எதிரே திருட்டுதனமாக மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக பட்டுக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சட்டவிரோதமாக மது விற்று கொண்டிருந்த கள்ளக்குறிச்சி தட்சன் பேட்டையை சேர்ந்த முருகன் (வயது 48) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.8260 மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு மதுபான கடைகள் 12 மணிக்கு திறக்கப்படும் என்பதால் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் சிலர் திருட்டுதனமாக அதிகாலை முதல் மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனை தீவிர நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X