என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது- ரூ.1லட்சத்து 61 ஆயிரம் பறிமுதல்
Byமாலை மலர்1 Dec 2021 9:37 AM GMT (Updated: 1 Dec 2021 9:37 AM GMT)
போலீசார் வருவதை அறிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் அடுத்துள்ள பெருமாநல்லூர் பள்ளிபாளையம் பகுதியில் இரவு நேரங்களில் பணம் வைத்து சூதாடுவதாக பெருமாநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முருகசாமி என்பவரது இடத்தில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது.
போலீசார் வருவதை அறிந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. உடனே போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட பகுதியிலிருந்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கால்டாக்சி மூலம் இங்கு வந்து சூதாடுவது விசாரணையில் தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X