என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாற்காலி மீது நடந்து சென்றது குறித்து திருமாவளவன் விளக்கம்
சென்னை:
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது கட்சி அலுவலகத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் அவரால் தண்ணீரில் நடந்து வந்து காரில் ஏற முடியவில்லை. அவரது தொண்டர்கள் அவரை
தூக்கி சென்று காரில் அமர்த்த நினைத்தார்கள். அதை மறுத்த திருமாவளவன் தான் நடந்து வருவதாகவே கூறினார்.
கழிவுநீர் கலந்த மழை நீரில் கால் நனையாதபடி இருக்க நாற்காலிகளை அவரது தொண்டர்கள் பயன்படுத்தினார்கள். படிக்கட்டில் இருந்து அவரை நாற்காலி மூலமாக காருக்குள் அழைத்து சென்றனர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. சமூக வலைதளங்களில் அவரை பற்றி பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். தொண்டர்களை திருமாவளவன் அவமதித்தாக செய்திகள் பரவியது.
இதனை தொல்.திருமாவளவன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனக்கு சொந்த வீடு இல்லை. எனது அலுவலகத்தில் உள்ள அறையில் இருந்து காரில் ஏற வரும்போது தொண்டர்கள் என்னை நாற்காலிகள் மூலமாக தாங்கி அழைத்து சென்றனர்.
பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக நான் டெல்லி புறப்பட்டேன். அவசரமாக விமானத்தை பிடிக்க வேண்டிய சூழ்நிலை இருந்ததால் கழிவுநீர் கலந்த மழை வெள்ளத்தில் நடந்து செல்லவில்லை.
நான் மழை நீரில் நடந்து செல்ல தயக்கம் காட்டவில்லை. ஆனால் உடனடியாக விமானத்தில் செல்ல வேண்டியது இருந்ததால் நான் அணிந்திருந்த ஷூ வெள்ளத்தில் நனைந்தால் மாற்ற முடியாத நிலை இருந்தது. இதனால் நாற்காலியை பயன்படுத்தி நான் கீழே விழுதாபடி தாங்கி பிடித்து எனது தொண்டர்கள் காருக்குள் அழைத்து சென்றனர். தொண்டர்களுடன் நான் குடும்பமாக பழகுபவன்.
என்னை பற்றிமற்றவர்கள் விமர்சனம் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அரசியல் லாபத்துக்காக இத்தகைய விமர்சனங்களை செய்கிறார்கள்.
தொண்டர்களை மதிக்கும் இயல்புடையவன் நான். அவமரியாதை செய்யும் குணம் என்னிடம் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்த 6 பேருக்கு கொரோனா
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்