search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    12 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பு

    கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரெயில்களில் இணைப்பதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன. அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்று ரெயில்வே துறை அறிவித்து இருந்தது.

    முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உட்கார்ந்து செல்லும் 2-ம் வகுப்பாக மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரெயில்களில் நின்று நெரிசலில் பயணம் செய்வது தவிர்க்கப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரெயில்களில் இணைப்பதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

    கொரோனா வைரஸ்


    நாளை மறுநாள் (3-ந்தேதி) முதல் முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். முதல் கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரெயில்கள் விவரம் வருமாறு:-

    1. சென்ட்ரல்- பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்.

    2. பெங்களூர் பிருந்தாவன்- சென்ட்ரல்.

    3. சென்ட்ரல்-கோவை எக்ஸ்பிரஸ்.

    4. கோவை-சென்ட்ரல் இண்டர்சிட்டி.

    5. விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ்.

    6. திருப்பதி- விழுப்புரம்.

    7. சென்ட்ரல்- திருப்பதி எக்ஸ்பிரஸ்.

    8. திருப்பதி-சென்ட்ரல்.

    9. சென்ட்ரல் -திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்.

    10. திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ்- சென்ட்ரல்.

    11. மங்களூர் சென்ட்ரல் - மட்கான் பாசஞ்சர்.

    12. மட்கான்- மங்களூர் சென்ட்ரல் பாசஞ்சர்.

    இந்த ரெயில்களுக்கு 2-ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


    Next Story
    ×