என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களியக்காவிளை அருகே வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
Byமாலை மலர்30 Nov 2021 10:12 AM GMT (Updated: 30 Nov 2021 10:12 AM GMT)
களியக்காவிளை அருகே வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே இடைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தினர் அனைவரும் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்த ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள 3 மோதிரங்களையும் திருடி சென்றனர்.
கனகராஜ் காலையில் எழுந்து பார்த்தபோது பணம் மற்றும் மோதிரத்தை காணவில்லை. அந்த பணம் மகளிர் குழுவில் இருந்து கடனாக பெற்றது ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி லலிதா களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களின் வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
களியக்காவிளை அருகே இடைவிளாகம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லலிதா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தினர் அனைவரும் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்த ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு பவுன் எடையுள்ள 3 மோதிரங்களையும் திருடி சென்றனர்.
கனகராஜ் காலையில் எழுந்து பார்த்தபோது பணம் மற்றும் மோதிரத்தை காணவில்லை. அந்த பணம் மகளிர் குழுவில் இருந்து கடனாக பெற்றது ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி லலிதா களியக்காவிளை போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களின் வீட்டின் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் பணம் மற்றும் நகையை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X