search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தொண்டி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

    தொண்டி அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தொண்டி:

    தொண்டி பஸ் நிலையம் அருகே அரசால் தடை செய்யப் பட்ட லாட்டரி சீட்டுகளை செல்போன் மூலம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தொண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் தொண்டி பஸ் நிலையம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த சி.கே. மங்கலம் சக்திவேல் (வயது29), பிரவீன் (20) உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 2 செல்போன், மொபைல் பிரிண்டர், ரூ. 240 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×