search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டில் நகை, பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொம்மிடி:

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாப்பம்பாடியை சேர்ந்தவர் சின்னமுத்து. இவருடைய மனைவி சசிகலா (வயது 65). சம்பவத்தன்று சசிகலா வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டு திருமணத்திற்காக சேலம் சென்றுவிட்டு கடந்த 27-ந் தேதி வீட்டுக்கு வந்தார். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த இருந்த மோதிரம், 4 தோடு, கால் கொலுசு மற்றும் ரூ.25 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து அவர் ஏ.பள்ளிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×