என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் கோவிலில் அய்யப்பன் ஆராட்டு நிகழ்ச்சி
Byமாலை மலர்29 Nov 2021 9:30 AM GMT (Updated: 29 Nov 2021 9:30 AM GMT)
மாலை ஈஸ்வரன் கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம், கொடி இறக்குதல், உற்சவம், நிறைவு பூஜைகள் நடக்க உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் காலேஜ் ரோடு ஸ்ரீ அய்யப்பன் கோவிலில் 62வது ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 17-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கடந்த 24-ந்தேதி பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் மண்டல பூஜை உற்சவ கொடியேற்றம் நடந்தது.
நேற்று மகா கணபதி ஹோமம், நவகலச அபிஷேகம், பறையெடுப்பு, தாயம்பகை மேளம் ஆகியவை நடந்தன.பறையெடுப்பில் நெல், அரிசி, பூ, நாணயம், தேங்காய், மஞ்சள், அவல் ஆகிய பொருட்கள் கொண்டு நிறைபடி வைத்து வழிபாடு செய்தனர்.
இன்று விஸ்வேஸ்வரா பெருமாள் கோவிலில் அய்யப்பன் ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. சபரிமலை அய்யப்பன் கோவில் தந்திரி கண்டரு மோகனரு தலைமையில் பெருமாள் கோவில் குளத்தில் ஆராட்டுநடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை ஈஸ்வரன் கோவிலில் இருந்து சுவாமி ஊர்வலம், கொடி இறக்குதல், உற்சவம், நிறைவு பூஜைகள் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X