search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டும், பொருட்கள் சிதறி கிடந்ததையும் படத்தில் காணலாம்
    X
    கொள்ளை நடந்த வீட்டில் பீரோ உடைக்கப்பட்டும், பொருட்கள் சிதறி கிடந்ததையும் படத்தில் காணலாம்

    திருப்பூரில் துணிகரம் - வியாபாரி வீட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை

    வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் கல்லூரி சாலை சாதிக்பாட்சாநகர் செண்பகதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). இவர் கல்லூரி சாலை ஹவுசிங் யூனிட் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்துள்ளார். மேலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கடை பஸ் நிறுத்தம் அருகில் ராஜேந்திரன் அவரது மனைவி செல்லத்துடன் சேர்ந்து மளிகை வியாபாரம் செய்துள்ளார். 

    நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்ததுடன், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.3லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம்இருக்கும். 

    வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்று ள்ளது தெரியவந்தது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×