என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் துணிகரம் - வியாபாரி வீட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்29 Nov 2021 8:01 AM GMT (Updated: 29 Nov 2021 8:01 AM GMT)
வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் கல்லூரி சாலை சாதிக்பாட்சாநகர் செண்பகதோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). இவர் கல்லூரி சாலை ஹவுசிங் யூனிட் பகுதியில் பனியன் வேஸ்ட் குடோன் வைத்துள்ளார். மேலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் மரக்கடை பஸ் நிறுத்தம் அருகில் ராஜேந்திரன் அவரது மனைவி செல்லத்துடன் சேர்ந்து மளிகை வியாபாரம் செய்துள்ளார்.
நேற்றிரவு வியாபாரம் முடிந்ததும் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்ததுடன், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.3லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம்இருக்கும்.
வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் உள்ளே புகுந்து நகை-பணத்தை திருடி சென்று ள்ளது தெரியவந்தது. இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X