search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனிச்சாமி
    X
    பழனிச்சாமி

    101 வயது முதியவரின் கண்கள் தானம்

    முதியவரின் கண்களை தானமாக வழங்கிய குடும்பத்தாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கேத்தனூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. 101 வயதான இவர் வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார். பழனிச்சாமியின் குடும்பத்தார் அவரது கண்களை ஏற்கனவே தானமாக வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தனர். 

    அதன்படி பழனிசாமி இறந்தபின்பு பல்லடம் இமைகள் கண்தான கழகத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் மூலம் கோவை தனியார் கண் மருத்துவமனைக்கு அவரது கண்கள் தானமாக வழங்கப்பட்டது. முதியவரின் கண்களை தானமாக வழங்கிய குடும்பத்தாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    Next Story
    ×