search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மக்கள் நலப்பணியாளர் பணி - விரைவில் முக்கிய அறிவிப்பு

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மக்கள் நலப்பணியாளர் விவரம் ஒன்றியம் வாரியாக சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    திருப்பூர்:

    கடந்த தி.மு.க., ஆட்சி காலங்களில் ஊராட்சிகளில் மக்கள் நலப்பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 2011 அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில் தற்போதைய தமிழக அரசு மக்கள் நலப்பணியாளர் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டது.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக மக்கள் நலப்பணியாளர் விவரம் ஒன்றியம் வாரியாக சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் விடுபட்ட மக்கள் நல பணியாளர்களின் ஆதார் விவரங்களை இன்று மாலைக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில்:

    2011ல் மக்கள் நலப்பணியாற்றியவர்களில் வேறு பணிக்கு சென்றவர், இறந்தவர் நீங்கலாக மற்ற பணியாளர் விவரம் கோரப்பட்டுள்ளது.

    அனைவரின் ஆதார் விவரங்களை பெற்று இன்று அனுப்பி வைக்க வேண்டுமென துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் நலப்பணியாளர் பணியிடம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது என்றனர்.
    Next Story
    ×