search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு மழைப்பொழிவு?

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக தலா 11 செ.மீ., திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 10 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. புதுச்சேரி காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ., தஞ்சை, மஞ்சளாறு, கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை,கே.எம்.கோவில், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், திருப்போரூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசல், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தண்டையார்பேட்டை, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், செங்கல்பட்டு மாவட்டம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம், காஞ்சிபுரம், தஞ்சை மாவட்டம் கும்பகோணம், வல்லம், பாபநாசம், அய்யம்பேட்டை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், நாகை மாவட்டம் திருப்பூண்டி, தலைஞாயிறு, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பொழிந்துள்ளது.

    Next Story
    ×