search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேங்கை பட்டியில் கன மழையால் சேதம் அடைந்த வீட்டை காணலாம்
    X
    வேங்கை பட்டியில் கன மழையால் சேதம் அடைந்த வீட்டை காணலாம்

    சிங்கம்புணரி பகுதியில் கனமழையால் 12 வீடுகள் சேதம்

    சிங்கம்புணரி உள்வட்டம் பகுதி மற்றும் எஸ்.எஸ். கோட்டை உள்வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 12 வீடுகள் மழையால் சேதம் அடைந்தன.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு தொடங்கிய மழை நேற்று காலை வரை கனமழையாக பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.

    இந்தநிலையில் சிங்கம்புணரி உள்வட்டம் பகுதி மற்றும் எஸ்.எஸ். கோட்டை உள்வட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 12 வீடுகள் மழையால் சேதம் அடைந்தன. சிங்கம்புணரி உள் வட்டம் பகுதியில் உள்ள ஆ.காளாப்பூர், மூவன்பட்டி, எஸ்.வி. மங்கலம், மேலப்பட்டி ஆகிய பகுதியில் கனமழைக்கு ஓட்டு வீடுகள், வீட்டின் ஓடுகள், வீட்டின் மண் சுவர்கள் இடிந்து சேதமாகின.

    இதேபோல் எஸ்.எஸ். கோட்டை உள்வட்டம் பகுதியில் மேலையூர், சூரக்குடி, டீ மாம்பட்டி, ஏரியூர், என்.மாம்பட்டி ஆகிய பகுதியில் 6 வீடுகள் சேதமடைந்தன. சிங்கம்புணரி உள்வட்டம் பகுதியில் சேதமடைந்த வீடுகளுக்கு வருவாய் ஆய்வாளர் ராஜா முகமது தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிலம்பரசன், அருண் ஆகியோர் விரைந்து சென்று இடிந்த வீடுகளை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க அறிக்கை தயார் செய்தனர்.

    அதேபோல் எஸ்.எஸ்.கோட்டை உள் வட்டத்தில் வருவாய் ஆய்வாளர் முரளி தலைமையிலான கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த பகுதிகளுக்கு விரைந்து சென்று வீடுகளின் சேதம் மதிப்பீடு குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
    Next Story
    ×