search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் சிறுவன் மர்மமான முறையில் உயிரிழப்பு

    பிரியதர்ஷினியிடம் விசாரணை நடத்திய போது, வெந்நீர் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஹீட்டரை கிரிசன் தொட்டதன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் இறந்ததாக கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் பூங்காநகரை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது மகன் கிரிசன் (வயது 6). கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்தனர். 

    இதையடுத்து பிரியதர்ஷினி தனது மகனுடன் வேறொரு வாலிபருடன் தனியாக குடித்தனம் நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்றிரவு வீட்டில் உள்ள கழிப்பறையில் கிரிசன் மயங்கிய நிலையில் கிடந்தான். அவனை பிரியதர்ஷினி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது கிரிசன் ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது. இதையறிந்த வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிரியதர்ஷினியிடம் விசாரணை நடத்தியபோது, வெந்நீர் போடுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஹீட்டரை கிரிசன் தொட்டதன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் இறந்ததாக கூறினார்.

    பிரியதர்ஷினி கணவனை பிரிந்து வேறு ஒரு வாலிபருடன் வசித்து வந்துள்ளார். இதனால் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக முருகன் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் கிரிசன் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×