search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து உரசியவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து உரசியவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ம.பொ.சி நகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் சசிராஜன் (வயது 31). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூர் பஜார் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த புத்தூரை சேர்ந்த பிரைட், ராம், அன்பு ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் லேசாக உரசியதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மேற்கண்ட 3 பேரும் சசிராஜனை தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது சம்பந்தமாக பிரைட், ராம், அன்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வகின்றனர்.
    Next Story
    ×