search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மனுக்களை பெற்ற காட்சி.
    X
    பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மனுக்களை பெற்ற காட்சி.

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்

    உரிய மனுக்கள் மீது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
    திருப்பூர்:

    தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்று வருகிறது. 

    இந்தநிலையில் இன்று திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் தலைமையில் பல்லடம் சட்டமன்ற தொகுதி, திருப்பூர் மாநகராட்சி மண்டலம் 3 மற்றும் 4க்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.  

    மேலும் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். உரிய மனுக்கள் மீது அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேஸ்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.  
    Next Story
    ×