என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 Nov 2021 9:31 AM GMT (Updated: 25 Nov 2021 9:31 AM GMT)
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
நூல் விலை உயர்வை கண்டித்து பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தினர் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொழிலாளர்கள் வாழ்வை கெடுக்கும் நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்.
மாதந்தோறும் விலையை ஏற்றி பனியன் தொழிலை அழிக்கக்கூடாது, விலையை ஏற்றும் நூற்பாலைகளை கண்டிக்கிறோம். நூல் விலையை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அப்போது இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தேவையில்லாத மத பிரச்சினைகளை எழுப்பாமல் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நூல் விலை உயர்வு குறித்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேச வேண்டும்.
அதேபோன்று திருப்பூரில் உள்ள அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் இதுகுறித்து கேள்விகள் எழுப்ப வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்து முன்னணி சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X