search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குடிநீர் வழங்காவிட்டால் போராட்டம் - ஆண்டியகவுண்டனூர் மக்கள் அறிவிப்பு

    கடந்த 25 நாட்களுக்கும் மேலாக குடியிருப்புகளுக்கு முறையான குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை.
    உடுமலை:

    உடுமலையை அடுத்த ஆண்டிகவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமராவதி நகர், சாயப்பட்டறை, திப்பிபாறை, தம்புரான் நகர், பெரும்பள்ளம், வாலாங்குளம், இந்திரபுரம், கரட்டுபதி மற்றும் காந்தி காலனி உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளது.

    இந்த பகுதிக்கு திருமூர்த்திஅணையில் செயல்படுத்தப்படுகின்ற கூட்டுக் குடிதிட்டத்தின் மூலமாக நாள்தோறும் குடிதண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இந்த குடியிருப்புகளுக்கு முறையான குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

    இதனால் பொதுமக்கள் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே சீரான முறையில் குடிநீர் வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
    Next Story
    ×