என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி - கலெக்டர் தகவல்
Byமாலை மலர்25 Nov 2021 8:52 AM GMT (Updated: 25 Nov 2021 8:52 AM GMT)
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்தாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் விதமாக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றிருந்த பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 18.10.2021 அன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரம், காங்கயம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஈரோடு மாவட்டமத்திய கூட்டுறவு வங்கி கிளையில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க்கடன், விவசாய கடன் மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்திக்காக பயிர்கடன்கள் வழங்கப்படுகின்றது.
வட்டியில்லா பயிர்க்கடன், தனிநபர் கடன், ஜாமீன் பெயரில் ரூ.1.60 லட்சமும், அடமானத்தின் பேரில் ரூ.3 லட்சம் வரை வழங்கப்படுகின்றது. மேலும் கறவைமாடு, கன்று வளர்ப்பு, செம்மறி ஆடு, வெள்ளாடு வளர்ப்பு மற்றும் அனைத்து விதமான விவசாய பயன்பாட்டிற்கு கடன்கள் வழங்கப்படுகின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதில் திருப்பூர் மாவட்டம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 22,371 நபர்களுக்கு ரூ.259.00 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பயிர்க்கடன் தள்ளுபடி மூலம் பயனடைந்த பயனாளிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X