search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கும்மிடிப்பூண்டியில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

    கும்மிடிப்பூண்டியில் விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காந்தி நகரை சேர்ந்தவர் ஜானகி (வயது 36). இவரது கணவர் ஏகாம்பரம் ஏற்கனவே இறந்து விட்டார். ஜானகிக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 22-ந்தேதி வீட்டில் தனியாக இருந்த ஜானகி, வயலுக்கு தெளிக்கும் புல் மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் ஜானகியின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×