search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் நகைகள் கொள்ளை

    இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய ஜெயசீலன் வீட்டை திறந்து பார்த்தபோது பூஜை,படுக்கை அறையில் பொருட்கள் சிதறி கிடந்தது.
    உடுமலை:

    உடுமலை ராமசாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 41). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு சென்றிருந்தார். இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பிய ஜெயசீலன் வீட்டை திறந்து பார்த்தபோது பூஜை, படுக்கை அறையில் பொருட்கள் சிதறி கிடந்தது. 

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2.5 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் 1 பவுன் தங்க தோடு ஆகியவற்றை திருடப்பட்டு இருந்தது. இதனால் ஜெயசீலன் அதிர்ச்சி அடைந்தார். 

    திருட்டு போன நகைகளின் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஜெயசீலன் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×