என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் பா.ஜ.க., மாநில செயற்குழு கூட்டம்
Byமாலை மலர்24 Nov 2021 10:29 AM GMT (Updated: 24 Nov 2021 10:29 AM GMT)
தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திறந்து வைத்தார். மேலும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்றார்.
முன்னதாக இன்று காலை பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார்.
தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மதியம் ஜே.பி.நட்டா பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X