search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசிய காட்சி. அருகில் நிர்வாகிகள் உள்ளனர்.
    X
    கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசிய காட்சி. அருகில் நிர்வாகிகள் உள்ளனர்.

    திருப்பூரில் பா.ஜ.க., மாநில செயற்குழு கூட்டம்

    தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பா.ஜ.க. அலுவலகத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று திறந்து வைத்தார். மேலும் பொதுக் கூட்டத்திலும் பங்கேற்றார்.

    முன்னதாக இன்று காலை பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். 

    தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி, கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., நடிகைகள் குஷ்பு, காயத்ரி ரகுராம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

    கூட்டத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மதியம் ஜே.பி.நட்டா பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
    Next Story
    ×