search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாளை அருகே வீட்டை உடைத்து சூறையாடிய வாலிபர் கைது

    பாளை அருகே வீட்டில் பங்கு கேட்டு தகராறில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    நெல்லை:

    பாளை, சீவலப்பேரி அருகே உள்ள பாப்பையா புரம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 60), விவசாயி. இவரது மூத்த மகன் சித்திரை ராஜா (வயது 32). இவர் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். நேற்று சித்திரை ராஜா தனது தந்தை வீட்டிற்கு சென்று, தனக்கு வீட்டில் பங்கு வேண்டும் என்று கேட்டு தகராறு செய்தார்.

    மேலும் வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து சூறையாடினார். கதவு, பீரோ உள்பட பல்வேறு பொருட்களை உடைத்து வீசினார். தடுத்த அவரது தந்தை குமாரை, அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து குமார், சீவலப்பேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரை ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×