search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மடத்துக்குளம் பகுதியில் வேளாண் திட்டங்கள் குறித்து பிரசாரம்

    உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நெல், கரும்பு, தென்னை, சிறுதானியங்கள், ஊட்டச்சத்துமிக்க தானியங்கள், குறித்து விளக்கப்பட்டது.
    மடத்துக்குளம்:

    மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பயன்தரும் தொழில்நுட்பங்களை கிராமம் தோறும் கொண்டு சேர்க்கும் திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதில் ஒரு பகுதியாக தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் ஊட்டச்சத்துமிக்க மானியத்திட்டத்தில் பிரசார வாகனம் இயக்கப்படுகிறது.

    மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இந்த வாகனம் சென்று திரும்புகிறது. நடப்பு நிதியாண்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நெல், கரும்பு, தென்னை, சிறுதானியங்கள், ஊட்டச்சத்துமிக்க தானியங்கள், குறித்து விளக்கப்பட்டது.

    மேலும் மக்காச்சோளம் தொடர்பான சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், மக்காச்சோள படைப்புழு மேலாண்மை தொழில்நுட்பங்கள் மற்றும் செம்மை நெல் சாகுபடி குறித்த தொழில் நுட்பங்கள் ஆகியவை பற்றி அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையிலும் பிரசாரம் செய்யப்பட்டது. இத்தகவலை மடத்துக்குளம் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.
    Next Story
    ×