என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லையில் மாடு மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலி
Byமாலை மலர்24 Nov 2021 7:05 AM GMT (Updated: 24 Nov 2021 7:05 AM GMT)
நெல்லையில் மாடு மீது ஆம்புலன்ஸ் மோதி நோயாளி பலியானார். அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை:
தென்காசி அருகே உள்ள ஆய்குடியை அடுத்த அகரகட்டு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி லதா (வயது 31). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாளை மண்டல அலுவலகம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, எதிரே ரோட்டில் திடீரென மாடு குறுக்கே பாய்ந்தது. இதனால் ஆம்புலன்ஸ், மாடு மீது மோதி, கவிழ்ந்தது.
இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி லதா மற்றும் அவரது தாயார் செல்வி, சகோதரர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் நோயாளி லதா பரிதாபமாக இறந்தார். அவரது தாயார் செல்வி மற்றும் சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி அருகே உள்ள ஆய்குடியை அடுத்த அகரகட்டு கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவரது மனைவி லதா (வயது 31). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
நேற்று இரவு மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாளை மண்டல அலுவலகம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது, எதிரே ரோட்டில் திடீரென மாடு குறுக்கே பாய்ந்தது. இதனால் ஆம்புலன்ஸ், மாடு மீது மோதி, கவிழ்ந்தது.
இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி லதா மற்றும் அவரது தாயார் செல்வி, சகோதரர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் சிறிது நேரத்தில் நோயாளி லதா பரிதாபமாக இறந்தார். அவரது தாயார் செல்வி மற்றும் சகோதரர் கிருஷ்ணமூர்த்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X