search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    கொழுமங்குழியில் அ.தி.மு.க.- பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

    ஊராட்சி மன்ற தலைவரை அழைக்காமல் பூமிபூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொழுமங்குழி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகிப்பவர் பிரியா. இவர் பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்தவர். 

    இந்தநிலையில் நேற்று திருப்பூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கொழுமங்குழி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதனை கொண்டாடும் விதமாகவும் பூமிபூஜைக்கும் கொழுமங்குழியில் தி.மு.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    இந்நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவரை அழைக்காமல் பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதையடுத்து போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.  
    Next Story
    ×