search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.
    X
    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    பல்லடத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    14-வது சம்பள குழு பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    பல்லடம்:

    பல்லடத்தில் அரசு பஸ் பணிமனை முன்பு போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் (சி.ஐ.டி.யு சங்கம்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஓய்வு பணப்பலன் வழங்க வேண்டும், 62 மாத பயணப்படி நிலுவையை உடனே வழங்க வேண்டும், 14 -வது சம்பள குழு பேச்சுவார்த்தை உடனடியாக நடத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, சி.ஐ.டி.யு.,போக்குவரத்து கழகத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    இதில் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், சக்திவேல், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×