என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் சிறுமியை திருமணம் செய்த சிறுவன் போக்சோவில் கைது
Byமாலை மலர்22 Nov 2021 9:02 AM GMT (Updated: 22 Nov 2021 9:02 AM GMT)
சிறுமியின் பெற்றோர்கள் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பல்லடம்:
கோவையை சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியும் காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கிராம பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு வந்த சிறுமியை அந்த சிறுவன் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளான்.
பின்னர் பெற்றோர்களுக்குத் தெரியாமல் இருவரும் ரகசிய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி ரகசிய திருமணம் செய்தது உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர் .
பல்லடம் வந்த சிறுமியின் பெற்றோர்கள் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசாரின் விசாரணையில் சிறுமியை அந்தச் சிறுவன் திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது.
இந்தநிலையில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் அந்த 17 வயது சிறுவனை மீட்டு திருப்பூர் முதன்மை நடுவர் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவன் கோவையில் உள்ள கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டான் .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X