என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடுப்பூசி போட்டுக்கொள்ள நிபந்தனை விதித்த கூலி தொழிலாளி- அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர்
Byமாலை மலர்22 Nov 2021 5:51 AM GMT (Updated: 22 Nov 2021 5:51 AM GMT)
ஜோலார்பேட்டை அருகே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்களிடம் ரூ.10 லட்சம் கேட்ட முதியவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெத்தகல்லு பள்ளி பகுதிகளில் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ குழுவினர் டாக்டர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் கோபி மற்றும் சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 50 வயது தொழிலாளி வீட்டிற்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகாதார பணியாளர்கள் சென்றனர்.
அப்போது அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் சுகாதார பணியாளர்கள் மீண்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் எனக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன். மேலும் என் உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். இதனை பாண்டு பத்திரத்தில் எழுதி தர வேண்டும் என கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பெத்தகல்லு பள்ளி பகுதிகளில் ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ குழுவினர் டாக்டர் புகழேந்தி, சுகாதார ஆய்வாளர் கோபி மற்றும் சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 50 வயது தொழிலாளி வீட்டிற்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு சுகாதார பணியாளர்கள் சென்றனர்.
அப்போது அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் சுகாதார பணியாளர்கள் மீண்டும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர் எனக்கு ரூ.10 லட்சம் கொடுத்தால் நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறேன். மேலும் என் உயிருக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும். இதனை பாண்டு பத்திரத்தில் எழுதி தர வேண்டும் என கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சுகாதார பணியாளர்கள் அவருக்கு கொரோனா தடுப்பூசி போடாமல் திரும்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்... கேரளாவில் மீண்டும் கனமழை- 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X