search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்: தொழிலாளி பலி

    மீஞ்சூர் அருகே விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மீஞ்சூர்:

    மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு ருக்மணி நகரில் வசித்து வந்தவர் சங்கர் (வயது 51). இவர் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள இந்தியன் ஆயில் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வேலை முடித்து வீட்டுக்கு தனது நண்பர் முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வடசென்னை அனல்மின் நிலைய சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அதிவேகமாக வந்த லாரி அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சங்கர் கடந்த 18-ந்தேதி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×