என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலீஸ் நிலையம் அருகே அடுத்தடுத்து 2 கடைகளில் பணம்-பொருட்கள் திருட்டு
Byமாலை மலர்21 Nov 2021 10:27 AM GMT (Updated: 21 Nov 2021 10:27 AM GMT)
போலீஸ் நிலையம் அருகே அடுத்தடுத்து 2 கடைகளில் பணம்-பொருட்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவர் மப்பேடு போலீஸ் நிலையம் அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல அவர் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.22 ஆயிரம் பணமும், 5 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களும் திருட்டு போனது தெரியவந்தது.
அதேபோல அருகே இருந்த துணி கடையின் பூட்டையும் உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று ரூ.20 ஆயிரம், மற்றும் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள துணிகளையும் திருடிச்சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக மப்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X