என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணகுடி அருகே குளிர்பானம் குடித்த பள்ளி மாணவி உயிரிழப்பு
Byமாலை மலர்21 Nov 2021 6:42 AM GMT (Updated: 21 Nov 2021 6:42 AM GMT)
சிறுமி குடித்த குளிர்பானத்தில் ஏதேனும் கலப்படம் இருந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள சிவஞானபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த்(வயது 41). கூலி தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் இந்துஜா(15), ஆவரைகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் வசந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள பூக்கடை அருகே ஒரு குளிர்பான கடைக்கு சென்றார். அங்கு அனைவரும் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
பின்னர் மீதம் இருந்த ஒரு பாட்டிலை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். மறுநாள் காலையில் இந்துஜா, அந்த குளிர்பானத்தை எடுத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கொண்டே போனதால் அவரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிறுமி இந்துஜா பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, அவரது உடலில் விஷம் கலந்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்து வந்தனர். நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவு வந்த பின்னரே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவரும். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி குடித்த குளிர்பானத்தில் ஏதேனும் கலப்படம் இருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள சிவஞானபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த்(வயது 41). கூலி தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் இந்துஜா(15), ஆவரைகுளத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் வசந்த் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள பூக்கடை அருகே ஒரு குளிர்பான கடைக்கு சென்றார். அங்கு அனைவரும் குளிர்பானம் வாங்கி குடித்துள்ளனர்.
பின்னர் மீதம் இருந்த ஒரு பாட்டிலை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். மறுநாள் காலையில் இந்துஜா, அந்த குளிர்பானத்தை எடுத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கொண்டே போனதால் அவரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிறுமி இந்துஜா பரிதாபமாக இறந்தார்.
ஆஸ்பத்திரியில் சிறுமி அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, அவரது உடலில் விஷம் கலந்துள்ளது என டாக்டர்கள் தெரிவித்து வந்தனர். நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்முடிவு வந்த பின்னரே சிறுமியின் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பது தெரியவரும். இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமி குடித்த குளிர்பானத்தில் ஏதேனும் கலப்படம் இருந்ததா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X