search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கூடுதல் சிறப்பு முகாம்

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கான கூடுதல் சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தர்மபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கான கூடுதல் சிறப்பு முகாம்கள் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் 1.1.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் எண் 6-ல் அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று ஒருவர் இடம்பெயர்ந்து இருந்தாலும், இறந்து போய் இருந்தாலும் படிவம் எண்- 7- லும், பதிவில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் படிவம் எண் 8- லும், சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் எண் 8- ஏ விலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×