search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    திருச்சி மத்திய பஸ் நிலையம், மணிகண்டம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    திருச்சி மத்திய பஸ் நிலையம், மணிகண்டம் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    திருச்சி:

    திருச்சி துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின் சாதனங்களில் அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய பஸ் நிலையம், வ.உ.சி. ரோடு, கலெக்டர் அலுவலக ரோடு, குமுளித்தோப்பு, ராஜா காலனி, கல்லாங்காடு, குமரன் நகர், கனரா பேங்க் காலனி, சீனிவாச நகர், ராமலிங்க நகர், கீதா நகர், கல்நாயக்கன் தெரு, மேட்டுத் தெரு, வாலாஜா தெரு, சண்முகா நகர், ரெங்கா நகர், வெக்காளியம்மன் கோவில் பகுதி, பாண்டமங்கலம், பாத்திமா நகர், நாச்சியார் கோவில் தெரு, முதலியார் சத்திரம், காஜா பேட்டை, அம்மையப்ப பிள்ளை நகர், எம்.எம்.நகர், வயலூர் மெயின் ரோடு, உய்யகொண்டான் திருமலை, வாசன் நகர், சோழங்கநல்லூர், புராமினேட் ரோடு, கண்டித் தெரு, கான்வெண்ட் ரோடு, ஜங்ஷன், பறவைகள் சாலை, பாரதியார் சாலை, பெரியமிளகு பாறை, பொன்னகர், செல்வா நகர், ஆர்.எம்.எஸ். காலனி, கருமண்டபம், தீரன் நகர், பிராட்டியூர் மற்றும் ராம்ஜி நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை தென்னூர் மின் செயற்பொறியாளர் பிரகாசம் தெரிவித்துள்ளார். இதேபோல் மணிகண்டம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி தென்றல் நகர், முடிகண்டம், நேருஜி நகர், மலர் நகர், நாகமங்கலம், மணிகண்டம், செங்குறிச்சி, மேக்குடி, ஆலம்பட்டி, பாகனூர், தீரன் மாநகர், மாத்தூர், எசனப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
    Next Story
    ×