search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தாராபுரம் அருகே மர்மமான முறையில் வாலிபர் உயிரிழப்பு

    வாலிபர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாராபுரம்:

    தாராபுரம் அடுத்த வரப்பாளையத்தில் வள்ளிம்மாள் என்பவரின் தோட்டத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் வேப்பமரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருப்பதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

    தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இதுகுறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபர் தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.  
    Next Story
    ×