search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பல்லடம் அருகே கோவிலுக்கு சொந்தமான ரூ.20 கோடி நிலம் மீட்பு

    கோவை மாவட்டம் சூலூர் திருவேங்கடநாதப்பெருமாள் கோவிலுக்கு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில் 28.14 ஏக்கர் நிலம் உள்ளது.
    பல்லடம்:

    பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டம் சூலூரில் திருவேங்கடநாதப்பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில் 28.14 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. 

    இதுகுறித்து அறநிலையத்துறையினருக்கு புகார் வந்ததின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவின்படி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர். 

    பின்னர் அந்த இடத்தில் இது கோவிலுக்கு சொந்தமான இடம் என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தின் சந்தை மதிப்பு ரூ.20 கோடி என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×