search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார்
    X
    புகார்

    ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி- பெண் மீது போலீசில் புகார்

    கும்மிடிப்பூண்டியில் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் கும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம், புது கும்மிடிப்பூண்டி, ம.பொ.சி. நகர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்களை சேர்த்து ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் 3 லட்சம் ரூபாய் சீட்டு போட்டவர்களுக்கு மாரியம்மாள் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனையடுத்து சீட்டு பணம் கட்டியவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால் வீட்டை விற்று ஏலச்சீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்துவிடுவதாக அவர் தெரிவித்து இருந்தார்.

    இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சீட்டு போட்டவர்கள் மாரியம்மாளை சந்திக்க சென்ற போது அவர் வீட்டை விற்றுவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீட்டு பணம் கட்டியவர்கள் மாரியம்மாள் மீது திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அவர் ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×