என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி சாமி சிலை பிரதிஷ்டை - அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
Byமாலை மலர்18 Nov 2021 8:55 AM GMT (Updated: 18 Nov 2021 8:55 AM GMT)
சேவூர் வாலீஸ்வரர் கோவிலுக்கு வள்ளி தெய்வானை உடனுறை கல்யாண சுப்ரமணியர் சாமி சிலை செய்ததாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அவினாசி:
அவினாசி அருகே சேவூரில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஸ்ரீ வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அனுமதியின்றி முருகர், வள்ளி தெய்வானை உள்ளிட்ட சாமி சிலை செய்ய பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை மொண்டிபாளையம் செயல் அலுவலருக்கு சேவூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சனி என்பவர் அனுப்பிய மனுவில், சேவூர் வாலீஸ்வரர் கோவிலுக்கு வள்ளி தெய்வானை உடனுறை கல்யாண சுப்ரமணியர் சாமி சிலை செய்ததாக கூறி பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோரிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் அர்ச்சகர் கும்பாபிஷேக பிரதிஷ்டை மற்றும் குரு பெயர்ச்சி ஹோமம் செய்துள்ளார். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் சரவணனிடம் கேட்டபோது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X