search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமுருகன்பூண்டி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கேட்டு 1,716 பேர் விண்ணப்பம்

    அவிநாசி, சேவூர் ரோடு சூளையில் 448 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 983 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
    அவிநாசி:

    நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் திருமுருகன்பூண்டி பேரூராட்சி பகுதியில் 5 ‘பிளாக்கு’களில், 225 வீடுகள் கட்டும்பணி நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில்  பயனாளிகள் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

    இதற்காக தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டது. அந்த விண்ணப்பங்கள் வருவாய் துறையினர் மூலம் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர், மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

    அதன்படி 1,716 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் வருவாய்த்துறை சார்பில் 960 மனுக்கள் கலெக்டரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவிநாசி, சேவூர் ரோடு சூளையில் 448 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 983 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே 160 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    43 வீடுகள் விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 40 வீடுகள் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது எனவும், எஞ்சிய வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது எனவும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×