என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலை அருகே தடுப்பணை உடைப்பால் வீணாகும் தண்ணீர்
Byமாலை மலர்17 Nov 2021 6:55 AM GMT (Updated: 17 Nov 2021 6:55 AM GMT)
தடுப்பணையை சரி செய்யாவிட்டால் முழுவதும் உடைந்து விழும் அபாயம் உள்ளது.
உடுமலை:
உடுமலை ஒன்றியம் உடுக்கம்பாளையம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 2018-19ம் ஆண்டில் ரூ.15 லட்சம் செலவில், பெரியபள்ளம் ஓடையின் குறுக்கே 15.2 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டது.
இந்த தடுப்பணை சுற்றுப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களிலுள்ள போர்வெல், தடுப்பணைகளுக்கு நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும், கால்நடைகள், மக்கள் குடிநீர்ஆதாரமாகவும் உள்ளது.
இந்த தடுப்பணை கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் தற்போது பெய்த மழைக்கு தாங்காமல் ஒரு பகுதி உடைந்தது. இதனால் மழை நீர் சேமிக்க முடியாமல் நீர் அனைத்தும் வீணாகி வருகிறது. தடுப்பணையை சரி செய்யாவிட்டால் முழுவதும் உடைந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே அதிகாரிகள் இந்த தடுப்பணையை உடனடியாக சரி செய்து பருவ மழையை சேமிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X