என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூரில் பழைய இரும்பு-பேப்பர் கடையில் தீ விபத்து
Byமாலை மலர்16 Nov 2021 10:37 AM GMT (Updated: 16 Nov 2021 10:37 AM GMT)
மேலூரில் பழைய இரும்பு, பேப்பர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மேலூர் பெரிய கடை வீதியில் பட்டாளம் கண்மாய் உள்ளது. இதனருகே பழைய இரும்பு சாமான்கள் மற்றும் பழைய பேப்பர்கள் வாங்கும் கடை உள்ளது.
இதன் உரிமையாளர் பாஸ்கரன் நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்று விட்டார். இன்று அதிகாலையில் பூட்டிய அவரது கடையில் இருந்து கரும்புகை வெளி வந்தது. இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து பார்த்தபோது கடை உள்ளே தீ கொழுந்துவிட்டு எரிந்து எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் அருகில் உள்ள கடை, வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் 3 டன் அட்டை பெட்டிகள் மற்றும் பேப்பர்கள் எரிந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதி செயலா? என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலூர் பெரிய கடை வீதியில் பட்டாளம் கண்மாய் உள்ளது. இதனருகே பழைய இரும்பு சாமான்கள் மற்றும் பழைய பேப்பர்கள் வாங்கும் கடை உள்ளது.
இதன் உரிமையாளர் பாஸ்கரன் நேற்று இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்று விட்டார். இன்று அதிகாலையில் பூட்டிய அவரது கடையில் இருந்து கரும்புகை வெளி வந்தது. இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
அதன்பேரில் மேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு வந்து பார்த்தபோது கடை உள்ளே தீ கொழுந்துவிட்டு எரிந்து எரிந்து கொண்டிருந்தது.
இதையடுத்து வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் அருகில் உள்ள கடை, வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் 3 டன் அட்டை பெட்டிகள் மற்றும் பேப்பர்கள் எரிந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது சதி செயலா? என்பது குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X