என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொலை செய்யப்பட்ட வாலிபரின் அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரம்
Byமாலை மலர்16 Nov 2021 9:37 AM GMT (Updated: 16 Nov 2021 9:37 AM GMT)
மர்ம நபர்கள் வாலிபரை கத்தியால் குத்திக் கொன்றதுடன், அடையாளம் தெரியாமல் இருக்க வாலிபரின் முகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் 15வேலம் பாளையம் சோழிபாளையம் காட்டுப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். மேலும் அடையாளம் காண முடியாத வகையில் முகம் எரிக்கப்பட்டு இருந்தது.
இதனால் மர்ம நபர்கள் வாலிபரை கத்தியால் குத்திக் கொன்றதுடன், அடையாளம் தெரியாமல் இருக்க வாலிபரின் முகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. கடந்த 9-ந்தேதி உடல் மீட்கப்பட்ட நிலையில் இன்று வரை இறந்தவரின் அடையாளத்தை காண முடியவில்லை.
இதையடுத்து வாலிபரின் அடையாளத்தை காண போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட வாலிபரின் உருவப்படத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
வாலிபரின் உருவப்படத்துடன் கூடிய நோட்டீஸ்களை 15 வேலம்பாளையம் மற்றும் திருப்பூர் மாநகர், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் வாலிபரின் அடையாளம் காணும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இறந்து கிடந்த வாலிபர் ரோஸ் நிற கேரளா மாடல் வேட்டி, வெள்ளை நீல கலர் வரி கோடிட்ட காலர் பாக்கெட் வைத்த சட்டை, எஸ்.எம்.டி. எலாக்ஸ்டிக்குள்ள டிராயர் அணிந்திருந்தார். வாலிபர் பற்றி விவரம் அறிந்தவர்கள் 94981 78820 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X