search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கருமாபாளையத்தில் தரைப்பாலம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்

    கருமாபாளையம் குட்டையில் தேங்கும் தண்ணீர், செம்மாண்டம்பாளையம் வழியாக சங்கமாங்குளத்துக்கு செல்கிறது.
    அவிநாசி:

    திருப்பூர் மாவட்டம் சேவூர் அடுத்த கருமாபாளையம் ஊராட்சி ஏ.டி., காலனியில் குட்டை உள்ளது. தற்போது பெய்த மழையில் குட்டை நிரம்பியுள்ளது. குட்டை நடுவில் உள்ள பாதை தான், கருமாபாளையம் ஊருக்கு செல்வதற்கான பிரதான வழித்தடம். 

    இது குளத்தின் மட்டத்துக்கே இருப்பதால் பெருமழை சமயத்தில் குட்டையில் இருந்து வெளியேறும் தண்ணீர் வழித்தடத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இந்த சாலையில் பயணிக்க முடியாத நிலையுள்ளது.

    மேலும் குட்டையில் உள்ள தடுப்புச்சுவர் பலவீனமடைந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும், இடிந்து விழும் நிலையுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், ஊருக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து கருமாபாளையம் ஊராட்சி தலைவர் சக்திவேல் கூறுகையில்:

    கருமாபாளையம் குட்டையில் தேங்கும் தண்ணீர், செம்மாண்டம்பாளையம் வழியாக சங்கமாங்குளத்துக்கு செல்கிறது. இதன் மூலம் சுற்றியுள்ள, 4, 5 கிராம ஊராட்சிகளின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். 

    இக்குட்டைக்கு பாதுகாப்பாக ‘பிளாட்பாரம்‘ அமைத்துக் கொடுப்பதுடன், குட்டையின் நடுவில் தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கலெக்டருக்கு மனு வழங்கியுள்ளோம் என்றார்.
    Next Story
    ×