என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
Byமாலை மலர்16 Nov 2021 4:43 AM GMT (Updated: 16 Nov 2021 6:02 AM GMT)
சளி, இருமல், தொண்டை வலி, தொடர்ந்து காய்ச்சல், காலையில் லேசான காய்ச்சல் இருந்து மாலையில் திடீரென அதிகமாவது, மூச்சுத்திணறல், கடுமையான சோர்வு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை:
கோவையில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த 68 வயது பெண், ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த 63 வயது பெண் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டு, அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-
கேரளாவில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், அங்கிருந்து தீபாவளிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தவரால், ஒரு பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மற்றொருவருக்கு எவ்வாறு பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை 13 பேரும் வெளியில் நடமாட வேண்டாம் என்றும், அவசியம் என்றால் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பொது வெளியில் சென்று வரவும் அறிவுறுத்தியுள்ளோம்.
அவர்களுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று மற்றும் பன்றிக்காய்ச்சல் ஆகிய இரு வைரஸ் பரவலுக்கும் ஒரே மாதிரியான தடுப்பு பணிகள், பரிசோதனை முறைகளே பின்பற்றப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
சளி, இருமல், தொண்டை வலி, தொடர்ந்து காய்ச்சல், காலையில் லேசான காய்ச்சல் இருந்து மாலையில் திடீரென அதிகமாவது, மூச்சுத்திணறல், கடுமையான சோர்வு ஆகியவை பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகளாகும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்... 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X