search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு

    நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52,585 ஆக அதிகரித்து உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தின் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 52,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.இந்த நிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்து 547 ஆக அதிகரித்தது.

    இதற்கிடையே நேற்று புதிதாக மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 585 அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று 35 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 51, 629 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 502 பேர் இறந்து விட்ட நிலையில் மீதமுள்ள 454 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×