என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராசிபுரம் அருகே அரிசி ஆலையில் பொருட்களை அடித்து சேதப்படுத்திய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்8 Nov 2021 11:50 AM GMT (Updated: 8 Nov 2021 11:50 AM GMT)
ராசிபுரம் அருகே அரிசி ஆலையில் பொருட்களை அடித்து சேதப்படுத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே பட்டணம் பரமேஸ்வரன் நகர் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருபவர் செந்தில். இவர் தீபாவளி அன்று ஆலையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் அன்று மாலை அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் ஆலைக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலி, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையடுத்து அரிசி ஆலையில் புகுந்து பொருட்களை சேதப்படுத்தியதாக பரமேஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்த கவிமணி (வயது 20) மற்றும் இளவரசன் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X