search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    கொடைரோட்டில் மளிகை கடை ஊழியர் மர்ம மரணம்

    கொடைரோட்டில் மளிகை கடை ஊழியர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைரோடு:

    நிலக்கோட்டை அருகே உள்ள எத்திலோடு ஊராட்சி கோவில்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 43). இவர் மளிகை கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் கொடைரோடு தனியார் பார் அருகே உள்ள ஹோட்டல் முன்பு மர்மமான முறையில் துரைப்பாண்டி இறந்து கிடந்தார்.

    இந்த தகவல் கிடைத்தவுடன் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துரைப்பாண்டி உடலை கைப்பற்றி நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். துரைப்பாண்டி குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்தவர் என்பது தெரியவந்தது. இவருக்கு கண்மணி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

    Next Story
    ×