என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் பொதுமக்களிடம் ரூ.3 கோடி மோசடி-எஸ்.பி.யிடம் கண்ணீர் மல்க புகார்
Byமாலை மலர்8 Nov 2021 10:05 AM GMT (Updated: 8 Nov 2021 10:05 AM GMT)
எஸ்.பி. சசாங்சாய் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் லோகேஷ்குமார், சக்திவேல் ஆகியோர் பல்லடத்தில்ரியல்எஸ்டேட், தறி எந்திரம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்வது, ஏலச்சீட்டு நடத்துவது உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வந்துள்ளனர்.
மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் பழகி வந்த அவர்கள் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. சுமார் ரூ.3கோடியே 63 லட்சம் வரை வாங்கினராம். ஆனால் அதனை மீண்டும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதாக கடன் கொடுத்த பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது அங்கு வந்த எஸ்.பி.சசாங்சாய் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டார்.
அப்போது பொதுமக்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர். பணத்தை பெற்றுதரும்படியும் கேட்டுக்கொண்டனர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி.,உறுதியளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X